நாடகக் கதையைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களை ஒருவிதக் களிப்பு மனநிலையில் நிலைகொள்ளச் செய்து அன்றையமேடை நிகழ்விற்கு தயார்ப்படுத்தும் பணிகளைத் தெருகூத்தின் கட்டியங்காரனும், ஸ்பெஷல் நாடகத்தின் பபூனும் செய்வான்.…
கூத்திலும் சரி, ஸ்பெஷல் நாடகத்திலும் சரி, இந்த அம்சம் தவிர்க்க முடியாத அம்சங்களாகப் பார்வையாளர்கள் கருதினார்கள். ஸ்பெஷல் நாடகங்களில் பபூன் -காமிக் நடைபெறும் வரை கூட்டம் அலைமோதும். கதையின் மையப் பாத்திரங்கள் வரும்போது கூட்டம் குறையும் பின்னர் முக்கியமான தர்க்கங்களின் போது தூங்கியவர்கள் விழித்துக் கொள்வார்கள்.